வக்பு வாரிய தலைவர் மஜக தலைமையகம் வருகை!

சென்னை.செப்.2., தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் ஜனாப் அப்துல் ரஹ்மான் அவர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்திற்கு வருகை தந்தார்.

அவரை பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் வரவேற்று மைக்கேல் ஹார்ட் எழுதிய ‘புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை 100 பேர்’ என்ற நூலை பரிசளித்தார்.

அப்போது தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர், துணைப் பொதுச் செயலாளர் தைமிய்யா ஆகியோரும் உடனிருந்தனர்.

அவருடன் பிறைமேடை செய்தி ஆசிரியர் காயல் மஹபூப் அவர்களும் வருகை தந்திருந்தார்.

சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இச்சந்திப்பு நடைப்பெற்றது.

வக்பு வாரியத்தின் எதிர்கால செயல் திட்டங்கள், காத்திருக்கும் சவால்கள் குறித்து ஜனாப். அப்துல் ரஹ்மான் அவர்கள் விளக்கினார்.

வக்பு வாரியம் சார்பில் கல்வி நிறுவனங்களை தொடங்குவது குறித்த ஆலோசனை மஜக சார்பில் எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனிஸ், பொறியாளர் சைபுல்லாஹ், துரை முகம்மது, இளைஞர் அணி செயலாளர் அசாருதீன், மருத்துவ சேவை அணி செயலாளர் அப்துல் ரஹ்மான், IKP மாநில செயலாளர் கோவை இஷாக் உள்ளிட்ட மஜக-வினரும் உடனிருந்தனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
02.09.2021